Tuesday, September 29, 2009

ரொறன்ரோ தமிழ் தகவல் தொழில்நுட்பக் கருத்தரங்கு

தமிழர்கள் மத்தியில் கணினிப்பாவனையை ஊக்குவிக்கும் நோக்கிலும் கணினியில் தமிழ் பாவனையை இலகுபடுத்தும் நோக்கிலும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி (04/10/2009)பிற்பகல் 4மணிக்கு கனடா கந்தசாமி கோவில் மண்டபத்தில் கருத்தரங்கும் அறிமுக நிகழ்வும் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வில்,
* தமிழ் விக்கிபீடியா
* உத்தமம் - தமிழ் இணைய மாநாடு 2009
* வலைப்பூ Blogs
* தமிழ் மென்பொருள்கள்
ஆகிய தலைப்புகளில் கருத்தரங்கும்,
* ’புத்தகம்’ இணையத்தளம் – ஈழத்தமிழர்களுக்கான சர்வதேச புத்தகக்கடை
* தமிழ் தட்டச்சு சேவை
போன்றவற்றின் அறிமுக நிகழ்வும்,
*பரிசு அட்டை – புத்தகம் இணையம்
*தமிழ் மென்பொருள்கள்

ஆகியவற்றின் விற்பனையும் இடம்பெறவுள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 416 273 5811 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ளலாம்.

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

அன்புடன்
புலம்பெயர் தமிழர் உலகம்.