Thursday, December 8, 2011

பிரித்தானியப் பாரம்பரியத் தொழிற்கலைகள்

பாரம்பரியத் தொழிகலை இழப்பு என்பது தமிழர்களுக்கு மட்டும் உரிய ஒரு சிக்கல் அல்ல. பிரித்தானியாவிலும் கூட இது ஒரு சிக்கல் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் தொழிற் புரட்சிக்கு அங்கு விருத்தி பெற்ற பாரம்பரியத் தொழிற்கலைகள் ஒரு முக்கிய மூலவேராக இருந்தன. இந்த தொழிற்கலைகளைப் பாதுகாக்கும் வண்ணம் பாரம்பரியத் கைத்தொழில்கள் அமைப்பு (http://www.heritagecrafts.org.uk) மற்றும் பிற நூற்றுக்கணக்கான அமைப்புக்களும் (http://www.heritagecrafts.org.uk/index.php/about/friends-and-affiliated-groups, http://www.worldskillslondon2011.com/) தனிநபர்களும் (http://traditionalcraftsblog.blogspot.com, http://greenwood-carving.blogspot.com, http://nicolawood-design.blogspot.com/p/projects.html) பல்வேறு செயற்திட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் முக்கியத்துவத்தை உணர்ந்த பிரித்தானிய அமைச்சர் யோன் கெயின்சு இந்தப் பாரம்பரிக் கலைகளை ஆய்வு (http://www.ccskills.org.uk/LinkClick.aspx?fileticket=6cMoZSIdVOA=&tabid=81) செய்வதற்காக ஒரு பெரும் தொகை பணத்தை ஒதுக்கி உள்ளார். இந்தப் பாரம்பரியக் கலைகளை ஊக்குவிப்பதன் மூலம் நவீன பொருளாரத்தின் ஒரு முக்கிய கூறாகவும் இவற்றைப் பயன்படுத்தலாம் என்பதை அவரின் செயற்பாடுகள் உணர்த்துகின்றன.

வில்வித்தை, எழுத்துக்கலை போன்றவை நவீன பொருளாதாரத்துக்கு பயன்படாமல் கூடப் போகலாம். ஆனால் அவற்றில் ஒரு இயல்பான நிறைவு கிடைக்கிறது. இசைக் கருவியைப் வாசிப்பது போன்று இந்தக் கலைகளைப் பயில்வதிலும் செய்வதிலும் மகிழ்ச்சி கிடைக்கிறது. இதற்காகவாவது இக் கலைகளைப் பாதுகாப்பது முக்கியம் ஆகிறது.

தமிழ்ச் சூழலைப் பொருத்த வரையில் அரசுகள் இந்த மாதிரி தொலைநோக்கான செயற்பாடுகளில் ஈடுபடும் என்று எதிர்பார்க்க முடியாது. எமது தேவைகளை உணரக் கூடிய, தொலைநோக்கான அரசுகளை அமைக்க நாம் தவறிவிட்டோம். எனவே இந்த மாதிரி முன்னெடுப்புக்களை தனிநபர்களும், தன்னார்வலர் அமைப்புக்களுமே முன்னெடுக்க வேண்டிய அவசியம் உள்ளது.

1 comment:

Post a Comment